வௌிநாட்டவர்களுக்கு சலுகை வழங்கும் வர்த்தமானி வௌியீடு

Date:

விசா காலத்தை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை திருத்தியமைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நேற்று (21) பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது.

வீசாவைக் காலம் கடந்து தங்கியிருப்பவர்களுக்கு முன்னர் நாளொன்றுக்கு 500 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டதுடன், புதிய திருத்தத்தின்படி, அதிக காலம் தங்கியிருக்கும் முதல் 07 நாட்களுக்கு அபராதம் விதிக்கப்படாது.

முதல் 07 நாட்களுக்குப் பிறகு, அடுத்த 07 நாட்களுக்கு விசா கட்டணத்துடன் கூடுதலாக US$ 250 அபராதம் விதிக்கப்படும்.

விசா காலம் முடிந்து 14 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தால், விசா கட்டணத்துடன் கூடுதலாக US$ 500 அபராதம் விதிக்கப்படும்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அதிகளவு அபராதம் விதிக்கப்பட்டமை தொடர்பில் வெளிநாட்டவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை பரிசீலித்த பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...

ஆதிவாசி தலைவர் உயிரிழப்பு

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல...

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...