மட்டக்களப்பு மாவட்ட பிரச்சினைகள் குறித்து ஆளுனர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆராய்வு

0
154

மட்டக்களப்பு மாவட்டத்தின் மாதாந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான செந்தில் தொண்டமான் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (27) இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன், வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன் மற்றும் அரசாங்க அதிபர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது மட்டகளப்பு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்டத்தின் தற்போதைய சுய நிலைத்தன்மையை மேம்படுத்த புதிய வளர்ச்சித் திட்டங்களை வகுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here