தொழில் சட்டத்தில் திருத்தம்

0
27

தற்போதைய தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் புதிய மசோதாவை கொண்டு வர எதிர்பார்ப்பதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கான தேவையான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பாக தோட்ட முகாமை அதிகாரசபையுடன் தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையுடன் பெருந்தோட்டத் துறையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here