Sunday, October 6, 2024

Latest Posts

ஜனாதிபதித் தேர்தலைத் தடுக்கக் கோரும் மனு: நிராகரித்தது உயர்நீதிமன்றம்

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

அத்துடன் நீதிமன்றக் கட்டணமாக ஒரு இலட்சம் ரூபா செலுத்துமாறும் மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றக் கட்டணத்தை ஒரு மாதத்துக்குள் செலுத்த வேண்டும் எனவும் மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற ஆயம் இந்த உத்தரவைப்  பிறப்பித்தது.

இந்த மனுவைத் தொழிலதிபர் சி.டி.லெனவ சமர்ப்பித்திருந்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.