சிறுவர்களிடம் பரவும் நோய் தொற்று

0
147

இலங்கையில் தற்போதைய நாட்களில், டெங்கு, இன்புளுவென்சா மற்றும் கோவிட் முதலான நோய்கள் சிறுவர்களிடையே பரவும் அபாயம் உள்ளது என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நோய் நிலைமைகளுக்கு உள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த காலத்தில் அதிகரித்துள்ளது என சிறுவர் நோய் விசேட வைத்தியர் தீபால் பெரேரா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,”கோவிட் பரவலானது தற்போதும் சமூகத்தில் உள்ளது. பரிசோதித்து பார்த்தால் அதனை அறிந்துகொள்ள முடியும்.

மேலும், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்டால், அது சில நேரங்களில் இன்புளுவென்சா அல்லது கோவிட் தொற்றாக இருக்கலாம்” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here