சிறுமியை கடுமையாக தாக்கிய அதிபர் கைது

0
203

யாழ். கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நான்கு நாட்களுக்கு முன்னர் (13ம் திகதி) ஒன்பது வயது சிறுமியை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அதிபர் ஊர்காவற்துறை பொலிஸாரால் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான சிறுமி யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் குழந்தையின் பெற்றோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் (HRCSL) முறைப்பாடு செய்துள்ளதாகவும், ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here