ரணில், டலஸ், அனுர போட்டி – நாளை வாக்கெடுப்பு

Date:

நாளை நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்வுக்கான போட்டியில் ரணில் விக்ரமசிங்க, டலஸ் அலகபெரும மற்றும் அனுர குமார திசாநாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொமியப்பட்டுள்ளன.

ஆளும் கட்சி சபை முதல்வர் தினேஷ் குணவர்தன ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பெயரை முன்மொழிந்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார அதனை வழி மொழிந்தார்.

டலஸ் அழகபெரும அவரது பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்ததுடன் வெளிவகார அமைச்சர் ஜி.எல் பிரிஸ் அதனை வழிமொழிந்தார்.

மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத அனுரகுமார திசாநாயக்கவின் பெயரை முன்மொழிந்ததுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அதனை வழிமொழிந்தார்.

அதன்படி மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே நாளைய தினம் ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...