அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் உறுதி! செலவுகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு

Date:

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு பணம் தேவை என்பதை கணக்கிட்டு உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க மற்றும் ஆணைக்குழுவின் ஏனைய அதிகாரிகளை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்த ஜனாதிபதி, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை உள்ளடக்கி அதற்கான பணத்தை ஒதுக்குமாறும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் நிதியமைச்சுக்கு அறிக்கை அனுப்புமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் நிதி அமைச்சுடன் கலந்துரையாடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அறிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக செலவிடப்பட்ட பணம் தொடர்பான உரிய மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு விரைவில் நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...