கிழக்கு மீனவர்கள் பிரச்சினையை அமைச்சர் டக்ளஸின் நேரடி கவனத்திற்கு கொண்டுசென்ற ஆளுநர் செந்தில்

Date:

கிழக்கில் இடம்பெறும் சட்டவிரோத டைனமைட் மீன்பிடி​  நடவடிக்கைகளை தடுப்பதற்கு தலையீடு செய்யுமாறு மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளை நேரில் சென்று சந்தித்த கிழக்கு ஆளுநர், கிழக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய திருகோணமலை ஆளுநர் செயலகத்திற்கு வருகை தருமாறு  அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்வரும் ஆகஸ்ட் 16ம் திகதி மீனவர்களுடனும் கடற்படையினருடனும் பேச்சுவார்த்தை நடத்த திருகோணமலைக்கு விஜயம் செய்ய இணங்கினார். இந்த சந்திப்பின் போது கிழக்கு  மாகாண கடற் தொழில் அபிவிருத்தி குறித்தும் அமைச்சருடன் விரிவாக கலந்துரையாடப்படும் என ஆளுநர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.  

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...

ஆதிவாசி தலைவர் உயிரிழப்பு

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல...

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...