GMOA சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் செந்தில் தொண்டமான்!

Date:

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் காணப்படுவதாக பரவிவந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண அதிகாரிகளுடன் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் கடுமையாகவும் அவர்களை பொது கூட்டங்களில் மட்டந்தட்டியும் நடத்துவதாகவும் அதனால் ஆளுநருக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு கிளை போராட்டம் நடத்த உள்ளதாகவும் செய்திகள் பரவின.

இதன்பின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்த கிழக்கு ஆளுநர் சுமூக நிலையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்கு மாகாணத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் செய்து வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமான் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடல் மேற்கொண்டனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு மாகாண சபை அதிகாரிகளுக்கு செந்தில் தொண்டமான் இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக முதல்வர், மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக செந்தில் தொண்டமான் நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...