தாலி திருடிய நபர் விரைவில் கைது! சதாகாலமும் சிறைக்குள் இருக்க வேண்டிய நிலை!

Date:

திருகோணமலை – திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இருந்து திருடப்பட்ட பலநூறு கோடி ரூபாய் பெறுமதியான தாலி தொடர்பில் பொலிஸ் விசாரணைகளுக்கு மேலதிகமாக இரகசிய பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்கள விசேட விசாரணை பிரிவு ஆழமான விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளது.

ஆலயத்திற்கு வரும் வழிகள் மற்றும் ஆலய சுற்றுவட்டாரத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை பரிசோதிக்க விசாரணை பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

திருகோணமலை – திருக்கோணேஸ்வர ஆலயம் தொல்பொருள் திணைக்கள பாதுகாப்பு வளாகத்தில் அமைந்துள்ளதால் அந்த திணைக்களத்தின் இரகசிய விசாரணை பிரிவு தாலி திருடிய சந்தேகநபர்களைத் தேடி வலைவீசி வருகிறது.

இந்த திருட்டு சம்பவத்தில் எவரேனும் கையும் களவுமாக பிடிபட்டால் அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு பிணையில் வெளியே வர முடியாத நிலை ஏற்படுவதுடன் சதாகாலமும் சிறையில் கடூழிய தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.

தாலி திருடிய நபரை மிக விரைவில் கைது செய்ய எதிர்பார்ப்பதாக விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...