தாலி திருடிய நபர் விரைவில் கைது! சதாகாலமும் சிறைக்குள் இருக்க வேண்டிய நிலை!

Date:

திருகோணமலை – திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இருந்து திருடப்பட்ட பலநூறு கோடி ரூபாய் பெறுமதியான தாலி தொடர்பில் பொலிஸ் விசாரணைகளுக்கு மேலதிகமாக இரகசிய பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்கள விசேட விசாரணை பிரிவு ஆழமான விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளது.

ஆலயத்திற்கு வரும் வழிகள் மற்றும் ஆலய சுற்றுவட்டாரத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை பரிசோதிக்க விசாரணை பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

திருகோணமலை – திருக்கோணேஸ்வர ஆலயம் தொல்பொருள் திணைக்கள பாதுகாப்பு வளாகத்தில் அமைந்துள்ளதால் அந்த திணைக்களத்தின் இரகசிய விசாரணை பிரிவு தாலி திருடிய சந்தேகநபர்களைத் தேடி வலைவீசி வருகிறது.

இந்த திருட்டு சம்பவத்தில் எவரேனும் கையும் களவுமாக பிடிபட்டால் அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு பிணையில் வெளியே வர முடியாத நிலை ஏற்படுவதுடன் சதாகாலமும் சிறையில் கடூழிய தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.

தாலி திருடிய நபரை மிக விரைவில் கைது செய்ய எதிர்பார்ப்பதாக விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...