சீன கப்பல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிக்கை

0
67

சர்ச்சைக்குரிய சீன விண்வெளி கண்காணிப்பு கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான ஊடகச் செய்திகளை முற்றாக நிராகரிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி இதனைத் தெரிவித்தார்.

இலங்கை இறையாண்மையுள்ள நாடு என்றும் அவர்கள் சுதந்திரமான முடிவுகளை எடுக்க முடியும் என்றும் இந்தியாவின் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் போது இது ஒவ்வொரு நாட்டின் இறையாண்மை உரிமைகள் தொடர்பான விவகாரம் என்றும் அரிந்தம் பாக்சி இதனைத் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here