இன்று வேட்புமனு ஏற்பு

0
191

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (14) காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழு கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

வேட்புமனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்க காலை 09.00 மணி முதல் 11.30 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், எதிரணி வேட்பாளரின் வேட்பு மனுவில் கையெழுத்திட்ட நபர் மட்டுமே எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவிக்க முடியும்.

ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு, சுயேட்சை வேட்பாளர்களாகப் போட்டியிடுபவர்கள் தங்கள் சின்னங்களை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here