புதிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர்

Date:

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் கோபால் பக்லே விரைவில் தமது சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ளதாகவும் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகரை நியமிக்கும் ஆலோசனைகளில் இந்தியா ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன், கோபால் பக்லேவை மீள நாட்டுக்கு அழைக்க இந்தியா ஆலோசித்துள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்தியத் தூதர் சந்தோஷ் ஜாவை இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிசம்பர் மாதத்துடன், அஸ்திரேலியாவுக்கான இந்தியத் உயர்ஸ்தானிகரின் சேவைக்காலம் நிறைவுக்கு வரவுள்ளது. அவுஸ்ரேலியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகராக கோபால் பக்லேவை நியமிக்க இந்தியா உத்தேசித்துள்ளது.

அவுஸ்ரேலியாவுடன் இந்தியா நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதால், கோபால் பக்லேவின் நியமனம் மேலும் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் என இந்தியா கருதுகிறது.

இந்தியா-ஐரோப்பிய யூனியனின் விவகாரங்களை கையாண்டதில் சிறப்பு நிபுணத்துவம் மிக்கவராக சந்தோஷ் ஜா, திகழ்வதால் இலங்கையில் இந்திய மற்றும் சீன விவகாரங்களை சிறப்பாக கையாள்வார் என கருதப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நெவில் வன்னியாராச்சி பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில்...

பெக்கோ சமனின் மனைவி பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி, சாதிகா லக்ஷானியை பிணையில் விடுவிக்குமாறு...

உயிர் அச்சுறுதல்! துப்பாக்கி கேட்கும் அர்ச்சுனா எம்பி

வெளிநாட்டுத் தயாரிப்பான “ஸ்பிரே கண்’ (pepper spray) துப்பாக்கியை தமது தற்பாதுகாப்புக்காக...

பிரகீத் எக்னெலிகொட வழக்கு விசாரணை மீள ஆரம்பம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு...