வர்த்தக அமைச்சருடனான கலந்துரையாடலில் கோழி இறைச்சியின் விலை தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, டிசம்பர் பண்டிகைக் காலத்தில் தற்போது 1,250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 1,100 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த தலைவர் அஜித் குணசேகர “வணிக அமைச்சருடன் விவாதித்தோம். அதன்படி, உற்பத்தி செலவை கணக்கிட்டுள்ளோம். பேச்சுவார்த்தைக்குப் பின் சில உடன்பாடுகள் எட்டப்பட்டன. இப்போது இறைச்சிக்கு தட்டுப்பாடு இல்லை. சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் அதிகபட்ச திறனில் உற்பத்தி செய்து வருகின்றனர். அதன்படி, எதிர்காலத்தில் தட்டுப்பாடு இருக்காது. டிசம்பர் மாதத்திற்குள் உற்பத்தி திறன் அதிகரித்து உபரியாக இருக்கும் என நம்புகிறோம். அதன்படி, விலை மேலும் குறையும். எங்களின் உற்பத்தியை தொடர அரசு எங்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்கியுள்ளது. 1,100ஐ எட்டும் என நம்புகிறோம். மிகப் பெரிய பிரச்சனை சோளம், அதை இலங்கைக்கு கொண்டு வந்தால், சோளத்தை முழுமையாக உணவுக்காக பயன்படுத்த முடியும். அப்போதுதான் உற்பத்திச் செலவைக் குறைக்க முடியும். நாங்கள் பொறுப்பேற்றோம். எந்தத் தட்டுப்பாடும் இல்லை, பண்டிகைக் காலத்தில் இந்த விலையை விடக் குறைவாகத் தரலாம்” என்றார்.