டான் பிரசாரத்துக்கு ஏற்பட்ட ஏமாற்றம்

Date:

சமூக செயற்பாட்டாளராகக் காட்டிக் கொள்ளும் லியனகே அபேரத்ன சுரேஷ் பிரியசாத் எனப்படும் டான் பிரியசாத், நேற்று (20) நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றபோது, விமான நிலையத்தினால் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு 08.22க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 653 என்ற விமானத்தில் அவர் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த விமானம் மூலம் மாலைத்தீவு செல்ல முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி கல்லுமுதூரையில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 6ஆவது சந்தேகநபரான இவர், இதன்காரணமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளார்.

ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி டான் பிரியசாத்தை நாட்டை விட்டு வெளியேற விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...

NDB விவகாரம்: இலங்கை வங்கி சூழலுக்கு கவன எச்சரிக்கை

இலங்கையின் நிதியியல் அமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நேஷனல் டெவலப்ப்மென்ட் வங்கி...