டான் பிரசாரத்துக்கு ஏற்பட்ட ஏமாற்றம்

Date:

சமூக செயற்பாட்டாளராகக் காட்டிக் கொள்ளும் லியனகே அபேரத்ன சுரேஷ் பிரியசாத் எனப்படும் டான் பிரியசாத், நேற்று (20) நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றபோது, விமான நிலையத்தினால் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு 08.22க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 653 என்ற விமானத்தில் அவர் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த விமானம் மூலம் மாலைத்தீவு செல்ல முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி கல்லுமுதூரையில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 6ஆவது சந்தேகநபரான இவர், இதன்காரணமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளார்.

ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி டான் பிரியசாத்தை நாட்டை விட்டு வெளியேற விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...