டான் பிரசாரத்துக்கு ஏற்பட்ட ஏமாற்றம்

Date:

சமூக செயற்பாட்டாளராகக் காட்டிக் கொள்ளும் லியனகே அபேரத்ன சுரேஷ் பிரியசாத் எனப்படும் டான் பிரியசாத், நேற்று (20) நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றபோது, விமான நிலையத்தினால் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு 08.22க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 653 என்ற விமானத்தில் அவர் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த விமானம் மூலம் மாலைத்தீவு செல்ல முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி கல்லுமுதூரையில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 6ஆவது சந்தேகநபரான இவர், இதன்காரணமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளார்.

ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி டான் பிரியசாத்தை நாட்டை விட்டு வெளியேற விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...

இலங்கை சுங்கத்துறை வசூல் சாதனை

இலங்கை சுங்கத்துறை நேற்று (06) ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு...

குடு விற்பனை செய்யும் NPP அரசாங்க தரப்பு

நாட்டில் போதைப்பொருள் தொற்றுநோயை ஒழிக்க அரசாங்கம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படுவதை...