டான் பிரசாரத்துக்கு ஏற்பட்ட ஏமாற்றம்

Date:

சமூக செயற்பாட்டாளராகக் காட்டிக் கொள்ளும் லியனகே அபேரத்ன சுரேஷ் பிரியசாத் எனப்படும் டான் பிரியசாத், நேற்று (20) நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றபோது, விமான நிலையத்தினால் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு 08.22க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 653 என்ற விமானத்தில் அவர் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த விமானம் மூலம் மாலைத்தீவு செல்ல முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி கல்லுமுதூரையில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 6ஆவது சந்தேகநபரான இவர், இதன்காரணமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளார்.

ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி டான் பிரியசாத்தை நாட்டை விட்டு வெளியேற விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வயிற்றுக்குள் 1 கோடி ரூபாய் கொக்கெய்ன்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 1 கோடி ரூபாய் பெறுமதியான...

மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100...

இலங்கை நிலக்கரி நிறுவன அலுவலகத்திற்கு பூட்டு

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி...

அதிகார மோகத்தில் NPP தரப்பு கலவரம்!

மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரத்தை முறையான தேர்தல் இன்றி கைப்பற்ற...