கிளிநொச்சியில் 3000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிப்பு

Date:

கிளிநொச்சி மாவட்டத்தில் 3000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி , கண்டாவளை , பச்சிலைப்பள்ளி , பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் விலையேற்றம் , தொழில் வாய்ப்பின்மை , வறுமை, உணவுப் பாதுகாப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 568க்கும் மேற்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களும், 2,675க்கும் மேற்பட்ட 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுமே போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 1,288 சிறுவர்களும் , கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 768 சிறுவர்களும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் 393 சிறுவர்களும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...