கிளிநொச்சியில் 3000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிப்பு

Date:

கிளிநொச்சி மாவட்டத்தில் 3000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி , கண்டாவளை , பச்சிலைப்பள்ளி , பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் விலையேற்றம் , தொழில் வாய்ப்பின்மை , வறுமை, உணவுப் பாதுகாப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 568க்கும் மேற்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களும், 2,675க்கும் மேற்பட்ட 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுமே போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 1,288 சிறுவர்களும் , கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 768 சிறுவர்களும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் 393 சிறுவர்களும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...