கிளிநொச்சியில் 3000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிப்பு

Date:

கிளிநொச்சி மாவட்டத்தில் 3000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி , கண்டாவளை , பச்சிலைப்பள்ளி , பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் விலையேற்றம் , தொழில் வாய்ப்பின்மை , வறுமை, உணவுப் பாதுகாப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 568க்கும் மேற்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களும், 2,675க்கும் மேற்பட்ட 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுமே போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 1,288 சிறுவர்களும் , கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 768 சிறுவர்களும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் 393 சிறுவர்களும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச...

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நடந்து சென்ற இருவர் மீது இன்று...

ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைக்காக...

ரணில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (23)...