கிளிநொச்சியில் 3000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிப்பு

Date:

கிளிநொச்சி மாவட்டத்தில் 3000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி , கண்டாவளை , பச்சிலைப்பள்ளி , பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் விலையேற்றம் , தொழில் வாய்ப்பின்மை , வறுமை, உணவுப் பாதுகாப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் இவ்வாறு சிறுவர்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 568க்கும் மேற்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களும், 2,675க்கும் மேற்பட்ட 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுமே போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 1,288 சிறுவர்களும் , கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 768 சிறுவர்களும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் 393 சிறுவர்களும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...