நாட்டின் அந்நிய கையிருப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டொலராக குறைந்தது

Date:

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது கொள்கை வட்டி வீதத்தினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

இதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றினை முறையே 100 அடிப்படை புள்ளிகளால் 10 வீதம் மற்றும் 11 வீதமாக குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

உள்நாட்டுப் பொருளாதாரத்தில் குறைந்த பணவீக்கம் மற்றும் தீங்கற்ற பணவீக்க எதிர்பார்ப்புகள் உட்பட தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்களை கவனமாக ஆய்வு செய்ததைத் தொடர்ந்து நாணயச் சபை இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக மத்திய வாங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டுகையிருப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளது.

சீன வங்கியின் பரிமாற்ற வசதியும் குறித்த தொகையில் அடங்குவதாக மத்திய வாங்கி தெரிவித்துள்ளது.

இருப்பினும் குறித்த காலப்பகுதியில் உள்நாட்டு கடனை மேம்படுத்தல் மற்றும் பங்களாதேஷுக்கு மீள செலுத்த வேண்டிய கடன் தொகை செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...