நிவாரணத் திட்டங்களுக்கு அனுமதி – தேர்தல்கள் ஆணைக்குழு

Date:

ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்ட பணிகளை தேர்தல் முடிவடைந்தவுடன் அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்; பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில ஒருசிலர் கருத்துக்களை குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான அடிப்படையற்ற கருத்துக்களுக்கு அவதானம் செலுத்தாமல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானங்கள் மீது நம்பிக்கை வைத்து செயற்படுமாறு பொதுமக்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இடைநிறுத்தப்பட்டுள்ள 2024/2025 பெரும்போகத்திற்கான உரம் வழங்குதல் மற்றும் மீனவர்களுக்கான நிவாரணத் திட்டங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

செப்டம்பர் மாத நிலுவைத் தொகையுடன் ஒக்டோபர் மாதத்தில் அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத்தை வழங்குவது தொடர்பில் ஆட்சேபனை இல்லை என ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...