வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் இன்று

0
129

நேற்று (11) பல மாவட்டங்களில் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சமர்ப்பித்ததுடன், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது.

நேற்றைய நிலவரப்படி 241 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதுடன், அடுத்த மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு இந்த நாட்களில் இடம்பெற்று வருகின்றது.

இன்று நண்பகல் 12 மணிக்கு பணிகள் நிறைவடைந்த பின்னர் பிற்பகல் 1.30 மணி வரை ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here