ஒன்பது மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Date:

நிலவும் மோசமான வானிலை காரணமாக கட்டம் 01 மற்றும் 02 கீழ் 09 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும் காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, பத்தேகம, நெலுவ மற்றும் நாகொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் கட்டம் 02 இன் கீழ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கும், களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, ஹொரண, வல்லவிட்ட, மத்துகம, தொடங்கொட மற்றும் இங்கிரிய பிரதேசங்களுக்கும் இந்த எச்சரிக்கை செல்லுபடியாகும்.

கேகாலை மாவட்டத்தில் வரகாபொல, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட, யடியன்தோட்டை மற்றும் புலத்கொஹுபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் எஹெலியகொட மற்றும் கிரியெல்லப்ப பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை நிலை 02ன் கீழ் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 01 ஆம் கட்டத்தின் கீழ், பதுளை மாவட்டத்தின் எல்ல, ஹாலிஎல மற்றும் பசறை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காலி மாவட்டத்தில் யக்கமுல்ல மற்றும் நியகம பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தில் பேருவளை மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும்.

மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவு, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் கலவான, அலபாத, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...