தல்துவ இரட்டை கொலை சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி

Date:

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், பொலிஸ் கான்ஸ்டபிளைக் கையில் வைத்திருந்த கைவிலங்கினால் கழுத்தை நெரிக்க முயற்சித்துள்ளதாக அவிசாவளை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரை சுட்டுக் கொன்று இருவரை படுகாயப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இளைஞன், சம்பவம் தொடர்பான வழக்குப் பொருட்களை காட்டுவதற்காகச் அழைத்துச் சென்ற போது இவ்வாறு செயற்பட்டுள்ளார்.

பொலிஸ் குழுவில் பயணித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் கைவிலங்கு அகற்றப்பட்டது.

பொலிஸ் அதிகாரிகளின் கழுத்தை நெரித்துவிட்டு ஓட முயன்றபோது சுட்டுக் கொன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் கான்ஸ்டபிளும் ஆபத்தான நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவிசாவளை தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவிசாவளை, மணிங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த மகேஷ் தனஞ்சய என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலை இடம்பெற்ற தினம் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் இவரே எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...