இன்றும் நாளையும் விருப்பு இலக்கம்

Date:

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான வேட்பாளர்களின் விருப்பு எண்களை வெளியிடுவது நாளை (16) நிறைவடையும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களின் விருப்பு எண்களும் தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்துள்ளதாகவும், விருப்ப எண்களை சரிபார்த்த பின் அதற்கான ஆவணங்களை மாவட்ட செயலாளர்கள் அலுவலகங்களில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்றும் (15) நாளையும் விருப்பு எண்களை வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (15) நடைபெறவுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் வேட்பாளர் ஒருவர் செலவிடும் பணத்தின் அளவு குறித்தும் கவனம் செலுத்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...

21ஆம் திகதிக்கு பின்னர் புலம்ப வேண்டாம் – நாமல்

தற்போதைய அரசாங்கத்தால் அநீதி இழைக்கப்பட்ட அனைவரும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு...

சம்பள உயர்வு என்ற போர்வையில் தொழிலார்களுக்கு கெடுபிடி வேண்டாம் – செந்தில் தொண்டமான்

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல்...