பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றம் தேவை – நீதி அமைச்சர்

Date:

பாராளுமன்ற தேர்தல் முறைமையில் திருத்தம் செய்வதற்கான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

160 உறுப்பினர்களை ஒற்றை ஆசன முறையிலும் எஞ்சிய 65 உறுப்பினர்களை விகிதாசார முறையிலும் தெரிவு செய்வதற்கான பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்ததாக அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

ஒற்றை மற்றும் விகிதாசார வாக்களிப்பு முறையின் கலவையுடன் தற்போதுள்ள வாக்களிப்பு முறையை திருத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான பாராளுமன்றக் குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை தாம் முன்வைத்துள்ளதாக அமைச்சர் கூறுகிறார்.

பாராளுமன்ற தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் எதிர்காலத்தில் கலந்துரையாடி அதனை பாராளுமன்றத்திற்கு கொண்டு வர எதிர்பார்ப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...