கோட்டாவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

Date:

மக்கள் இயக்கத்தின் செயற்பாட்டாளர்கள் இருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் யாழ்.நீதிவான் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கின் சாட்சியாளராக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அழைக்க முடியாது என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யுமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

லலித் குமார் வீரராஜு மற்றும் கூகன் முருகானந்தன் ஆகியோர் 2011 ஆம் ஆண்டு பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு இன்று (19) நோட்டீஸ் அனுப்பி மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

காமினி அமரசேகர, யசந்த கோதாகொட மற்றும் ஏ. எச். எம். டி. நவாஸ் உச்ச நீதிமன்ற அமர்வு முன் அழைக்கப்பட்ட போது கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மனுதாரரின் சட்டத்தரணி நுவான் போபகே நீதிமன்றில் தெரிவித்தார்.

ஆனால் கோட்டாபாய ராஜபக்சவுக்காக எந்த சட்டத்தரணியும் நீதிமன்றில் ஆஜராகவில்லை.

அதன்படி, மனுதாரருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்புமாறு மனுதாரரின் வழக்கறிஞருக்கு அறிவித்த நீதிபதிகள் மனுவை மீண்டும் டிசம்பர் 15-ம் திகதிக்கு அழைக்கும்படி உத்தரவிட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...