வெடிகுண்டு மிரட்டல்: கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்

0
186

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இந்திய விமான சேவை நிறுவனமான விஸ்தாரா ஏர்லைன்ஸின் விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

அந்த விமானம் மும்பையில் இருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்திலிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, லண்டன் நோக்கி பயணித்த விஸ்தாரா விமான சேவைக்கு சொந்தமான விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஜேர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here