Sunday, May 18, 2025

Latest Posts

மற்றும் ஒரு போதைப் பொருள் கடத்தல் சந்தேகநபர் STF சுற்றிவளைப்பில் கைது

பாணந்துறை அலோபோமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர், பாணந்துறை திக்துடுவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய, திட்டமிட்ட குற்றவாளியான பாணந்துறை சாலிந்துவின் நெருங்கிய உறவினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபர் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

டுபாயில் இருந்து செயற்படும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் இவர்  தொடர்பை பேணி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.