மொட்டுக் கட்சி – ரணில் உறவு குறித்து ஹக்கீம் வௌியிட்டுள்ள தகவல்

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாரிய குழுவொன்று தயாராகவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்துகொள்ளும் நம்பிக்கையில் தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுமார் நாற்பது பேர் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இக்குழுவினர் ஏற்கனவே பல தடவைகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுமாறு ஜனாதிபதி தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்த அவர், ஒரு குழுவுடன் இணைந்து செயற்படும் போது கட்சி மாறுவது ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் புரிந்துணர்வுடன் செயற்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...

விமலுக்கு CID அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை...