பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Date:

தொடர்ந்து பெய்து வரும் கனமழையுடன், பல பகுதிகளில் நிலச்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பானது, நேற்று(31) இரவு 7.30 முதல் இன்று(31) இரவு 7.30 வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, புலத்கொஹுபிடிய மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம மற்றும் பொல்கஹவெல ஆகிய பகுதிகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம பிரதேசத்திற்கு விடுக்கப்பட்ட முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்தின் தும்பனை மற்றும் மாத்தளை மாவட்டத்தின் லக்கல பல்லேகம ஆகிய பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை முதலாம் நிலை இரண்டாம் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7.30 மணியளவில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு கீழே.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

ஏன் இந்த இராஜினாமா?

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல்...

ரணில் தொடர்பான B அறிக்கையின் சட்ட ஓட்டை அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன்...

அவசரமாக கூடும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை முன்னிட்டு, இலங்கை சட்டத்தரணிகள் சங்க Bar...