பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Date:

தொடர்ந்து பெய்து வரும் கனமழையுடன், பல பகுதிகளில் நிலச்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பானது, நேற்று(31) இரவு 7.30 முதல் இன்று(31) இரவு 7.30 வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, புலத்கொஹுபிடிய மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம மற்றும் பொல்கஹவெல ஆகிய பகுதிகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம பிரதேசத்திற்கு விடுக்கப்பட்ட முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்தின் தும்பனை மற்றும் மாத்தளை மாவட்டத்தின் லக்கல பல்லேகம ஆகிய பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை முதலாம் நிலை இரண்டாம் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7.30 மணியளவில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு கீழே.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மறு அறிவித்தல் இல்லாமல் தொழிற்சங்க நடவடிக்கை

சுகாதார அமைச்சு தன்னிச்சையாக இடமாற்ற செயல்முறையை செயல்படுத்தத் தயாராக இல்லை என்றால்,...

கொலைக்கு உதவிய சட்டத்தரணி கைது

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் ஒரு...

ரணில் மீதான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக லண்டன் தனிப்பட்ட பயணத்திற்காக பொது...

காணாமல் போனவர்களின் 35வது வருடாந்த நினைவு நாள்! (புகைப்படங்கள்)

கொழும்பு LNW: சீதுவவில் உள்ள ரத்தொலுவ காணாமல் போனவர்களின் நினைவு நாள்...