பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Date:

தொடர்ந்து பெய்து வரும் கனமழையுடன், பல பகுதிகளில் நிலச்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பானது, நேற்று(31) இரவு 7.30 முதல் இன்று(31) இரவு 7.30 வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, புலத்கொஹுபிடிய மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம மற்றும் பொல்கஹவெல ஆகிய பகுதிகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம பிரதேசத்திற்கு விடுக்கப்பட்ட முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்தின் தும்பனை மற்றும் மாத்தளை மாவட்டத்தின் லக்கல பல்லேகம ஆகிய பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை முதலாம் நிலை இரண்டாம் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7.30 மணியளவில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு கீழே.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...

நடக்கவே முடியாத வயதிலும் களத்துக்கு வருகிறார் மஹிந்த!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள்...

இந்திய ஜார்கண்ட் மாநில மாநாட்டில் இதொகா தலைவர், ஶ்ரீதரன் எம்பி பங்கேற்பு

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் இதொகா...

தங்காலையில் இருவர் சுட்டுக் கொலை

தங்காலை, உனகுருவாவில் உள்ள கபுஹேன சந்திப்பில் நேற்று மாலை 6.55 மணியளவில்...