இந்திய நிதி அமைச்சரை வரவேற்ற அமைச்சர் ஜீவன் தலைமையிலான குழு

0
117

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான அரசாங்கத்தின் உயர்மட்ட பிரமுகர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.

‘நாம் 200’ நிகழ்வு நாளை வியாழக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பையேற்று இந்திய அரசின் பிரதிநிதியாகவே இந்திய நிதி அமைச்சர் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றார்.

இந்திய நிதி அமைச்சரை வரவேற்கும் நிகழ்வில் ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here