பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் பாதுகாப்பு செயலாளருக்கு சந்திரிக்கா கடிதம்

Date:

தமக்கு வழங்கப்பட்டுள்ள மெய்ப்பாதுகாவலர்கள் குறைக்கப்பட்டமை தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தனது கணவர் விஜய குமாரதுங்க கொலை செய்யப்பட்டது போல, மரண அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள தம்மையும் கொலை செய்வதற்குச் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விசேட பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரினால் தமக்கான பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 50ல் இருந்து 30 ஆகக் குறைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், எந்த அளவுகோலின்படி தமக்கு 30 பாதுகாவலர்களை மாத்திரம் வழங்கத் முடிவு செய்யப்பட்டுள்ளமைக்கான காரணம் என்னவென்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறித்த கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...