இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனலைதீவு மீனவர்களை விடுவிக்கக் கோரி ஊர்காவற்றுறையில் போராட்டம்

Date:

இந்தியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள அனலைதீவு மீனவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரி யாழ். ஊர்காவற்றுறை பிரதேச செயலகம் முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்து.

கடந்த 10/06/2024 திகதியன்று யாழ். அனலைதீவு கடற்பரப்பில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள், கடல் சீற்றம் காரணமாக தமிழகம் ஆர்காட்டுத்துறையில் கரையொதுங்கி தற்போது திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி இரண்டு மீனவர்களையும் விடுவிக்கக் கோரி ஊர்காவற்றுறை பிரதேச செயலகம் முன்பாக அனலைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அனலைதீவு மீனவர்கள் இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனலைதீவைச் சேர்ந்த நாகலிங்கம் விஐயகுமார், திருச்செல்வம் மைக்கல் பெர்னாண்டோ ஆகிய மீனவர்களே திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய போராட்டத்தின் இறுதியில் போராட்டக்காரர்களால் ஊர்காவற்றுறைப் பிரதேச செயலாளர் மஞ்சுளாதேவி சதீசனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....