“We are One” என்ற அமைப்பானது இன்று (07) கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் “போர் வேண்டாம்” என்ற தலைப்பில் சமாதான மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரை உடனடியாக நிறுத்தவும், இனப்படுகொலையை நிறுத்தவும் கோரி இது ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனதா விமுக்தி பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் பங்கேற்கவில்லை.
இந்நிகழ்வில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.























புகைப்படங்கள் – அஜித் செனவிரத்ன–