அமெரிக்காவின் ஆட்சி மாற்றம் – இலங்கைக்கு பாதிப்பா?

Date:

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் புதிய நியமனம்  இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என நிபுணர் அரசியல் ஆய்வாளர் கலாநிதி தயான் ஜயதிலக்க கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய தலைமை  இலங்கையின் ஆட்சியை சற்று வித்தியாசமான கண்ணோட்டத்துடன் பார்க்கும் சாத்தியம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் முன்னைய நிலைமையை விட சிக்கலான நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் வருகையின் ஊடாக அமெரிக்காவிற்கும் உலக நாடுகளுக்கும் இடையிலான உறவு மாற்றமடையும்.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கு இடையில் இருந்த உறவு இருந்தததனை விடவும் நெருக்கடியாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாகும்.

அத்துடன் ட்ரம்ப் ஜனாதிபதியாகியதன் ஊடாக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பனிப்போர் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...