இங்கிலாந்துக்கு 169 வெற்றி இலக்கு, கோலி, பாண்ட்யா அரைச்சதம்

Date:

டி20 உலக கோப்பையின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றனர். இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்கமே சொதப்பலாக இருந்தது. முதல் பந்தில் கேஎல் ராகுல் பவுண்டரி அடித்தாலும் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி- ரோகித் சர்மா ஜோடி நிதானமாக ஆடினர். பவர் பிளேயில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 38 ஓட்டங்கள் மட்டுமே அடித்திருந்தது.

தடுமாற்றத்துடன் ஆடிய ரோகித் சர்மா 28 பந்துகளில் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் 14 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்ததாக விராட் கோலி – பாண்ட்யா ஜோடி அதிரடியாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர்.

சிறப்பாக விளையாடிய விராட் கோலி அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய பாண்ட்யா 29 பந்தில் அரை சதம் அடித்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் எடுத்தது. கடைசி 5 ஓவரில் 68 ஓட்டங்களை இந்திய அணி குவித்தது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...