யார் யார் தேசிய பட்டியலில் வரலாம்

Date:

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது கட்சி அல்லது சுயேச்சைக் குழுவினால் தேசியப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர்கள் அல்லது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களை மாத்திரமே நியமிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு.“29 தேசியப்பட்டியல் எம்.பி பதவிகள் தொடர்பாக கட்சியின் செயலாளர்களுக்கு அறிவித்து, நியமிக்கப்பட்ட தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளுக்கு வேட்புமனுக்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டோம்.

இதன்படி கட்சியின் செயலாளர் அல்லது சுயேச்சைக் குழுவின் தலைவர் தேசியப்பட்டியலில் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள வேட்புமனுவில் உள்ள பெயர்களில் இருந்து உரிய எண்ணிக்கையை தெரிவு செய்து அனுப்ப முடியும்.

அல்லது இந்தத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவருக்குக் கூட கட்சியின் செயலாளர் தேசியப் பட்டியல் எம்.பி பதவியை வழங்கலாம்.

தேசியப் பட்டியலிலும், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான தொகுதியின் வேட்புமனுவிலும் ஒரு பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரையும் வர்த்தமானியில் வெளியிட முடியாது.

நேற்று (நவம்பர் 16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...