யார் யார் தேசிய பட்டியலில் வரலாம்

Date:

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது கட்சி அல்லது சுயேச்சைக் குழுவினால் தேசியப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர்கள் அல்லது பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களை மாத்திரமே நியமிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு.“29 தேசியப்பட்டியல் எம்.பி பதவிகள் தொடர்பாக கட்சியின் செயலாளர்களுக்கு அறிவித்து, நியமிக்கப்பட்ட தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளுக்கு வேட்புமனுக்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டோம்.

இதன்படி கட்சியின் செயலாளர் அல்லது சுயேச்சைக் குழுவின் தலைவர் தேசியப்பட்டியலில் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள வேட்புமனுவில் உள்ள பெயர்களில் இருந்து உரிய எண்ணிக்கையை தெரிவு செய்து அனுப்ப முடியும்.

அல்லது இந்தத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவருக்குக் கூட கட்சியின் செயலாளர் தேசியப் பட்டியல் எம்.பி பதவியை வழங்கலாம்.

தேசியப் பட்டியலிலும், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான தொகுதியின் வேட்புமனுவிலும் ஒரு பெயரைத் தவிர வேறு எந்தப் பெயரையும் வர்த்தமானியில் வெளியிட முடியாது.

நேற்று (நவம்பர் 16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் வங்கி பற்றிய சந்தேகங்கள் அதிகரிப்பு!

இலங்கையின் வங்கித் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ள ரூ. 13.5 பில்லியன்...

இந்திய துணை ஜனாதிபதி நாளை மறுநாள் இலங்கை வருகிறார்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக...

நாட்டில் இன்று வெப்பம் அதிகரிக்கும்

நாட்டில் இன்று (17) வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும்...

400 கோடி பெறுமதி ஹெரோயின் மீட்பு

போதைப்பொருள் கடத்தப்பட்ட நிலையில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில், 400...