10ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக பேராசிரியர் கலாநிதி அசோக ரன்வல

Date:

புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரின் சபாநாயகராக பேராசிரியர் கலாநிதி அசோக ரன்வல தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதமர் ஹரினி அமரசூரிய இந்த பெயரை முன்மொழிய அமைச்சர் விஜித ஹேரத் அதனை வழிமொழிந்தார்.

தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினரான ரன்வல, இவ்வருட பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 109,332 விருப்பு வாக்குகளைப் பெற்று கம்பஹா மாவட்டத்தின் விருப்பு வாக்கு பட்டியலில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினராகவும் உள்ள அசோக ரன்வல, உயிர் தலைமுறை பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளராகவும் (Director of Biogeneration Economics Research Institute) கடமையாற்றியுள்ளார்.

பெட்ரோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றிய ரன்வல, தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து வலுவான தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்ததோடு, பியகம தொகுதியை மையப்படுத்தி தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...

விமலுக்கு CID அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை...