சஜித் வெளியிட்ட 3 கடிதங்கள் குறித்து ஆராய்வதாக ஜனாதிபதி உறுதி

Date:

சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு (ஐ.சி.சி.) இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) அனுப்பிய மூன்று கடிதங்கள் குறித்து ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று கடிதங்களையும் தனக்கு அனுப்பி வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்த ஜனாதிபதி, அவற்றைப் பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் செயற்பாடுகளில் தேவையற்ற தலையீடுகள் இருப்பதாக குற்றம் சுமத்தி இலங்கை கிரிக்கெட் சபையை இடைநிறுத்துமாறு கோரி நவம்பர் 6, 7 மற்றும் 9 ஆம் திகதிகளில் ஐசிசிக்கு மூன்று கடிதங்களை அனுப்பியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த மூன்று கடிதங்களையும் தாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததாக பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“மூன்று கடிதங்களை எனக்கு அனுப்புங்கள். நான் அவற்றை பரிசீலிக்கிறேன்” என்று ஜனாதிபதி சஜித் பிரேமதாசவிடம் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

UNP – SJB ஐக்கியம்!

ஐக்கிய தேசியக் கட்சியினால் உறுப்புரிமை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள, தற்போது ஐக்கிய மக்கள்...

அரசியலமைப்புக்கு முரணான ரணில் விக்கிரமசிங்கவின் கைது…?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...

ரணில் தெரிவித்துள்ள நன்றி

தனது வீட்டிலிருந்து வீடியோ இணைப்பு மூலம் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி...

CID அழைப்பில் திடீர் திருப்பம்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக...