சஜித் வெளியிட்ட 3 கடிதங்கள் குறித்து ஆராய்வதாக ஜனாதிபதி உறுதி

Date:

சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு (ஐ.சி.சி.) இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) அனுப்பிய மூன்று கடிதங்கள் குறித்து ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று கடிதங்களையும் தனக்கு அனுப்பி வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்த ஜனாதிபதி, அவற்றைப் பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் செயற்பாடுகளில் தேவையற்ற தலையீடுகள் இருப்பதாக குற்றம் சுமத்தி இலங்கை கிரிக்கெட் சபையை இடைநிறுத்துமாறு கோரி நவம்பர் 6, 7 மற்றும் 9 ஆம் திகதிகளில் ஐசிசிக்கு மூன்று கடிதங்களை அனுப்பியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த மூன்று கடிதங்களையும் தாம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததாக பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“மூன்று கடிதங்களை எனக்கு அனுப்புங்கள். நான் அவற்றை பரிசீலிக்கிறேன்” என்று ஜனாதிபதி சஜித் பிரேமதாசவிடம் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...