பாலியல் லட்சம் கேட்ட பொலிஸ் பரிசோதகர்

Date:

பாலியல் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளரான பெண்ணுக்கு எதிராக கல்முனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.

வழக்கில் அவருக்கு சாதகமான மேலதிக அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கும், வாரம் ஒரு முறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று கையெழுத்திடுவது தொடர்பான நீதிமன்ற கட்டளையை மாதத்திற்கு ஒரு முறை என நீடிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறி உப பொலிஸ் பரிசோதகரால் பாலியல் இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.

இதற்கமைய, பாலியல் இலஞ்சம் கோர முற்பட்ட போது, உப பொலிஸ் பரிசோதகரை கல்முனையிலுள்ள ஹோட்டலொன்றில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்ததாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.

சந்தேகநபரை சம்மாந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட...

மூத்த அரசியல்வாதி காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்.  சிறிது...

கைதாகி விடுதலையான முக்கிய அதிகாரி

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின், கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர்...

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...