சஜித் ஜப்பானிய தூதுவரிடம் விடுத்த கோரிக்கை

Date:

இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜப்பானிய தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜப்பானிய தூதுவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றபோது, ​​எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவைப் பேணுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கு தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த காலங்களில் ஜப்பானினால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது உறுதியளித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....