வாடகை, குத்தகை வீடுகள் அரசுக்கு தலையிடி

0
141

அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு இனிமேல் அமைச்சர்களுக்கு வாடகை அடிப்படையிலோ அல்லது வரி அடிப்படையிலோ உரிமை கிடையாது என சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

வாடகை அல்லது வரி அடிப்படையில் பெறப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் அரசுக்கு தலைவலியாக இருப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

“இரண்டு வகையான வீடுகள் உள்ளன. ஒன்று வரி அடிப்படையில் அரசால் கையகப்படுத்தப்பட்ட தனியார் குடியிருப்புகள். அவை அரசுக்கு சுமையாகவும், தலைவலியாகவும் மாறிவிட்டன. எனவே, அமைச்சர்கள் மீண்டும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு செல்வார்கள் என நான் நம்பவில்லை. குத்தகை அல்லது வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட வீடுகள் மீண்டும் பராமரிக்கப்படுவதில்லை. ஆனால் அரசாங்கத்திற்கு சொந்தமான பல உத்தியோகபூர்வ இல்லங்கள் உள்ளன. அந்த குடியிருப்புகளை சுத்தம் செய்து பராமரிக்கும் பொறுப்பு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ இல்லங்கள் அமைச்சர்களின் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தப்படாது அரசாங்கத்தின் பொது நோக்கத்திற்காகவே பயன்படுத்தப்படும் என நம்புகிறோம். அமைச்சர்கள் யாரும் காலியிடங்கள் கேட்கவில்லை.”

மாதிவெலவில் அமைந்துள்ள மந்திரி வீட்டுத் தொகுதியை தான் மேற்பார்வையிட்டதாகவும், அது மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், பராமரிப்பு இல்லாததால், இடிந்து விழும் தருவாயில் உள்ளதாகவும், இந்த நாட்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் சபாநாயகர் ரன்வல தெரிவித்தார்.

தொலைதூரத்தில் இருந்து வரும் அமைச்சர்களின் தேவையின் அடிப்படையில் அந்த வீடுகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

களனி, பொல்லேகல, மானெல்வத்தையில் அமைந்துள்ள நாகாநந்தா பௌத்த கற்கைகள் நிறுவகத்தில் 19ஆவது தடவையாக நடைபெற்ற “பரமித பரிஷ்கர மகா பூஜை” நிகழ்வில் கலந்து கொண்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சபாநாயகர் நேற்று (01) இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here