Friday, May 9, 2025

Latest Posts

இன்று முதல் சதோச ஊடாக மக்களுக்கு அரிசி – தேங்காய்

நாடளாவிய ரீதியாக உள்ள ஸ்ரீலங்கா சதொச ஊடாக இன்று (6) முதல் வாடிக்கையாளர்களுக்கு நாட்டு அரிசி மற்றும் தேங்காய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சதொசவின் தலைவர் சமித பெரேரா தெரிவித்தார்.

இதன்படி வாடிக்கையாளர் ஒருவர் ஒருமுறைக்கு தலா ஒரு கிலோ அரிசி 220 ரூபாவிற்கும், ஒரு தேங்காய் 130 ரூபாவிற்கு பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஒருவர் ஐந்து கிலோ அரிசியும் மூன்று தேங்காய்களையும் ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரிசி மற்றும் தேங்காய் சதொச ஊடாக நுகர்வோருக்கான சந்தைப்படுத்தல் நேற்று (5) கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டதாக தலைவர் சமித பெரேரா தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.