ஐக்கிய மக்கள் சக்தியின் எஞ்சிய 04 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் கட்சியின் செயற்குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் பல சுற்று நீண்ட கலந்துரையாடல்களின் பின்னர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் அங்கீகாரத்துடன் 04 பெயர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சுஜீவ சேனசிங்க மற்றும் எரான் விக்ரமரத்ன மற்றும் ஒருவரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேசியப்பட்டியல் உறுப்பினராக ஆரம்பம் முதலே நியமிக்கப்பட்டிருந்தார்.