சுதந்திர தினத்துக்கு முன் இன நல்லிணக்கம் தொடர்பில் தீர்வுகளை எட்ட ஜனாதிபதி இணக்கம்!

Date:

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள், அதிகாரப் பகிர்வு, புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் கலந்துரையாடி புதிய தீர்மானம் எடுப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுதந்திர தினத்துக்கு முன் இன நல்லிணக்கம் தொடர்பில் தீர்வுகளை எட்ட முடியுமா என நாம் தீர்மானிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி எம்மிடம் கூறினார்.

13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டுமென நாம் கூறியதுடன் புதிய அரசியல் அமைப்பில் நிரந்தர அரசியல் தீர்வை காண வேண்டும் எனவும் நாம் வலியுறுத்தினோம்.

இன்றைய கலந்துரையாடலில் சிங்கள, முஸ்லிம் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட போதிலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரித்திருந்தது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.  சட்டவிரோதச்...

ஸ்டாலின் தோல்வி!

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்...

அதிரடி முன்னிலையில் தமிழக விஜய் வெற்றிக் கழகம்!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4,...

மகிந்த ராஜபக்சவுக்கு CIABOC அழைப்பாணை!

இலங்கை விமானச் சேவையின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு...