சுதந்திர தினத்துக்கு முன் இன நல்லிணக்கம் தொடர்பில் தீர்வுகளை எட்ட ஜனாதிபதி இணக்கம்!

Date:

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள், அதிகாரப் பகிர்வு, புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் கலந்துரையாடி புதிய தீர்மானம் எடுப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுதந்திர தினத்துக்கு முன் இன நல்லிணக்கம் தொடர்பில் தீர்வுகளை எட்ட முடியுமா என நாம் தீர்மானிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி எம்மிடம் கூறினார்.

13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டுமென நாம் கூறியதுடன் புதிய அரசியல் அமைப்பில் நிரந்தர அரசியல் தீர்வை காண வேண்டும் எனவும் நாம் வலியுறுத்தினோம்.

இன்றைய கலந்துரையாடலில் சிங்கள, முஸ்லிம் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட போதிலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரித்திருந்தது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

பாரிய அளவு நிதி அனுப்பும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதியம் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிட்டத்தட்ட...

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...