வடிவேல் சுரேஷ் எம்பிக்கு இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து

Date:

ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேசிற்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மலையக மக்கள் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் என குடியுரிமை பறிக்கப்பட்டு நாடாற்ற சமூகமாக மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்ட போதிலும், இன்று நாட்டின் ஜனாதிபதியின் ஆலோசகராக மலையக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை ஒட்டுமொத்த மலையக மக்களுக்கும் பெருமையளிக்கும் விடயமாகும்.

வடிவேல் சுரேஷ் எம்பி தனது அரசியல் வாழ்க்கையை இலங்கை தொழிலாளர் காங்கிரசில் ஆரம்பித்து, மறைந்த தலைவர்களான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் பாசறையில் வளர்ந்து, மலையகத்தில் மிக முக்கியமான தொழிற்சங்கமான LJW யின் பொதுச் செயலாளராக இருந்து இன்று ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளமை தனது கடின உழைப்பிற்கு கிடைத்துள்ள அங்கீகாரமாக கருதப்படுகிறது.

மேலும் அவருடைய இப்பதவி காலத்தில் மலையக மக்களுக்கு பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டில் உயர் பொலிஸ் அதிகாரி கைது

லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்தால் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ்குமார்...

மஹிந்த சமரசிங்கவுக்கு அரசாங்கத்தின் உயர் பதவி?

அமெரிக்காவிற்கான இலங்கையின் தூதராக தற்போது பணியாற்றி வரும் மஹிந்த சமரசிங்கவுக்கு, அரசாங்கத்தின்...

காதலனை சேர மன்னார் யுவதி எடுத்த தைரியமான முடிவு!

இலங்கையில் உள்நாட்டு போர் ஏற்பட்ட சமயத்தில் அங்கிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வருவோரின்...

வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை பயன்படுத்தி இலங்கை முன்னேற வேண்டும் – ஐ.நா

சர்வதேச குற்றங்கள் உட்பட கடந்த காலங்களில் செய்யப்பட்ட கடுமையான மீறல்கள் மற்றும்...