உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

Date:

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அதிகபட்சமாக 30,000 மெட்ரிக் தொன்களுக்கு உட்பட்டு பச்சை அயடின் கலக்காத உப்பை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சமையல் மற்றும் தொழில்துறை தேவைகளுக்கான உப்பு விநியோகத்தில் உள்நாட்டு சந்தையில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அவதானிக்கப்பட்டுள்ளது.

அதற்கு தீர்வாக, நடைமுறையில் உள்ள வரி விகிதத்தில், 30,000 மெட்ரிக் டன் பச்சை அயடின் கலக்காத உப்பை இறக்குமதி செய்து, சந்தைக்கு வழங்க அனுமதிக்க வேண்டும் என, உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...