எனது ஆதரவு ரணிலுக்கே – மொட்டுக் கட்சி இராஜாங்க அமைச்சர்

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிச்சயமாக ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

“இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதியின் தலைமைத்துவம் இந்த நாட்டிற்குத் தேவை. அதற்கான காரணத்தை நான் காண்கிறேன், ஒன்று, நாம் ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்தியிருந்தாலும், பொறுப்பற்ற முறையில் பிரபலமான தலைப்புகளில் சென்று அந்த மேடைகளில் பேசப்படும் விஷயங்களைப் பற்றி பேசினால், இந்த நாடு அதலபாதாளத்தை அடைவதை யாராலும் தடுக்க முடியாது.

கேள்வி – அப்படியென்றால் அடுத்த தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வரவேண்டும் என்று அர்த்தமா?

“அடுத்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வர வேண்டும். ஏனெனில் இந்த ஆபத்தான மற்றும் சிக்கலான செயல்முறையிலிருந்து நாம் இன்னும் வெளியே வரவில்லை. இந்த திட்டத்தை யாரும் சீர்குலைக்க அனுமதிக்க முடியாது” என்றார்.

கேள்வி – அப்படியென்றால் ஜனாதிபதித் தேர்தலின் போது நீங்களும் உங்கள் அணியும் நிச்சயமாக ரணிலுக்கு ஆதரவாக நிற்பீர்கள் என்று அர்த்தமா?

“நிற்க வேண்டும்” என தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...

கைது கதையிலேயே மூழ்கியுள்ள ஜனாதிபதிக்கு வாழ்க்கைச் செலவு நெருக்கடி புரியவில்லை

கைது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்குப்...

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...