நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

Date:

நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் 2 படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அக்கரைப்பேட்டை, பெருமாள் பேட்டை பகுதியை சார்ந்த மீனவர்கள் இரண்டு படகுகளில் வழக்கம்போல மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

மீனவர்கள் கோடியக்கரை அப்பால் வெள்ளிக்கிழமை இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, இரண்டு படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இலங்கை கடற்படையின் தாக்குதலில் படுகாயம் அடைந்த மீனவர்கள் ராஜேந்திரன், ராஜ்குமார்.இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் படுகாயம் அடைந்த மீனவர்கள் ராஜேந்திரன், ராஜ்குமார்.

மேலும் மீனவர்களின் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருள்களை அவர்கள் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

இதனால் படுகாயம் அடைந்த மீனவர்கள் ராஜேந்திரன், ராஜ்குமார் ஆகியோர் சனிக்கிழமை காலை கரையேறி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...