நடுவானில் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு – குர்திஸ்தானில் இலங்கை பெண் உயிரிழப்பு

Date:

உடல்நலம் பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் (Erbil International Airport) உயிரிழந்துள்ளார்.

நடுவானில் விமானம் பயணித்துக்கொண்டிருந்த போது இந்த பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் விமானம் அவசரமாக எர்பில் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு சிகிச்சை பயணளிக்காமையால் இந்த உயிரிழப்பு இடம்பெற்றதாக குர்திஸ்தானில் உள்ள  இலங்கை தூதரகத்தின் கௌரவ அதிகார அஹமட் ஜலால் தெரிவித்துள்ளார்.

எர்பிலில் உள்ள இலங்கையின் கெளரவ தூதரக அதிகாரி அஹமட் ஜலால்,

டோஹாவில் இருந்து பாரிசுக்கு இந்தப் பெண் விமானத்தில் சென்றுக்கொண்டிருந்த போது இவ்வாறு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளதுடன், தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக கெளரவ தூதரக அதிகாரி  அஹமட் ஜலால், கூறியுள்ளார்.

81 வயதான குறித்த இலங்கை பெண் பிரான்சில் வசித்து வருபவர் என குர்திஸ்தானில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் கூறியுள்ளதுடன், இவரின் சடலத்தை பிரான்ஸுக்கு கொண்டுசெல்ல அவரது மகனுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் துணை தூதரகம் கூறியுள்ளது.

“இலங்கை பிரஜை ஒருவருக்கு இப்பகுதியில் இதுபோன்ற சம்பவமொன்று நடப்பது இதுவே முதல் முறையாகும்” என தூதரக அதிகாரி அஹமட் ஜலால் கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....