கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்!

Date:

தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

மக்கள் மீது வரியை சுமத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (27) கொழும்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தவுள்ளன.

தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலைய ஐக்கிய மக்கள் இயக்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

மாணவர் சங்கங்கள், விவசாய சங்கங்கள், கடற்றொழிலாளர் சங்கங்கள், தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள் என பெருந்திரளானோர் பங்கு கொள்கின்றனர் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஐக்கிய மக்கள் இயக்கத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று பிற்பகல் 03.00 மணிக்கு நடைபெறவுள்ள இந்த மாபெரும் கண்டனப் பேரணியில் கலந்துகொள்வதற்கு அனைவரும் அழைக்கப்படுவார்கள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட...

மூத்த அரசியல்வாதி காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்.  சிறிது...

கைதாகி விடுதலையான முக்கிய அதிகாரி

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின், கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர்...

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...